எல்லை இல்லா நிலத்திலே
வற்றாத குளமாக அப்துல் கலாம்
எல்லை தாண்டி விண்ணை நோக்கி
புறப்பட்டது அவர் மூச்சு நில்லாமல்
நிலை இல்லா வாழ்விலே நினைவாக
உலாவுகின்றது அவரின் நிழல் படம்
விஞ்ஞானத்தை அஞ்சாமல் அணைத்துக்
கொண்டது பஞ்சதந்திரம்
அஞ்சலி தூவ
எஞ்சியது எல்லோருக்கும் அவர் ஞாபகம்
இன்று ஒரு நாள் போதுமா இனி என்றும்
தொடருவது அவரின் நினைவு ஒன்றேதான்
மானிடர்களே தமிழ் நாட்டுக்கு கிடைத்த
மாணிக்கத்துக்கு மறவாமல் உதிர்த்துவிடுங்கள்
கண்ணீர்ப் பூக்களை.....\
No comments:
Post a Comment