Friday, 29 July 2016

அஞ்சலி

எல்லை இல்லா நிலத்திலே
வற்றாத குளமாக அப்துல் கலாம்

எல்லை தாண்டி விண்ணை நோக்கி
புறப்பட்டது அவர் மூச்சு நில்லாமல்

நிலை இல்லா வாழ்விலே நினைவாக
உலாவுகின்றது அவரின் நிழல் படம்

விஞ்ஞானத்தை அஞ்சாமல் அணைத்துக்
கொண்டது பஞ்சதந்திரம் 

அஞ்சலி தூவ
எஞ்சியது எல்லோருக்கும் அவர் ஞாபகம்

இன்று ஒரு நாள் போதுமா இனி என்றும்
தொடருவது அவரின்  நினைவு ஒன்றேதான்

மானிடர்களே தமிழ் நாட்டுக்கு கிடைத்த
மாணிக்கத்துக்கு மறவாமல் உதிர்த்துவிடுங்கள்
கண்ணீர்ப் பூக்களை.....\

No comments:

Post a Comment