மனிதன் மனதிலே
மறைத்து வைத்து
வளர்க்கும் மரம்
பொறாமை ......./
இரத்தத்தை நீராக
ஊற்றி எலும்பை
வேலியாகக் கட்டி
பாதுகாத்து வைக்கும் மரம்
பொறாமை ....../
பிறர் வாழ்க்கை
மேல் கல் எறிந்து
அவர்கள் சந்தோசத்தை
உரமாகப் போட்டு
வளர்க்கும் மரம்
பொறாமை ...../
மனம் என்னும்
மண்ணிலே வளர்ந்து முகத்
திரையைக் கிழித்து
ஒரு நாள் வெளியாகும் மரம்
பொறாமை ....../
சிறுகச் சிறுகச்
சேர்ப்பவனையும்
சிதைத்து துவைக்க வரும் மரம்
பொறாமை ...../
உறவாடி கெடுக்க
பாலம் போட முன்
வரும் மரம் பொறாமை ...../
உள்ளே ஒன்று வெளியே ஒன்று
வைத்து மறைக்க
காரணமாகும் மரம்
பொறாமை ..../
ஒருவன் வளர்ச்சியை
பார்த்ததும் கெட்டவன்
உள்ளத்தில் உடனே
முளையிடும் மரம் பொறாமை ...../
மனிதனை மனிதனாக
வாழ விடாமல் தடுக்கும்
மரம் பொறாமை ..../
எத்தனை போட்டியிலும்
திட்டம் போட்டு நுழைகின்ற மரம்
பொறாமை ..../
பொதுவாக பொறாமை
முளையிடுவது
உண்மை முளையிலே
கிள்ளி விடுவதானால்
விளைவதோ நன்மை ...../
No comments:
Post a Comment