Monday 25 November 2019

#ஓ முதல் எழுத்துக் கவிதை**************************#தலைப்பு (ஓடுகின்றது காலம் )


ஓடம் ஏறி ஓடையில் 
போனவரே/
ஓடும் முகிலை தூதாக 
விடவா?

ஓராயிரம் ஆசைகளை 
நெஞ்சில் அடைத்தவரே/
ஓயாமல் கனவில் 
வந்து விடுவாயா?
ஓங்கி அடிக்கும் 
அலையிடம் புலம்பிடுவாயா?

ஓலைக் குடிசையில்  
நினைவோடு காத்திருக்கேன் /
ஓசையிடும் நாயும் 
காவலுக்கு விழித்திருக்கு/

ஓட்டாண்டியான  வாழ்க்கையே 
நிலையானது மீனவனுக்கு /
ஓட்டைப் பானையும் 
அணைந்த அடுப்புமாக /
ஓடுகின்றது காலம் 
நம்மையும் அழைத்து /



No comments:

Post a Comment