Wednesday 27 November 2019

நினைப்பதெல்லாம நடந்து விட்டால்.



நினைவுக்கும் பெரும் 
வலிமை  உண்டு/
நடத்தி முடி அதனைச் 
செயலாய்க்  கொட்டு/

கற்பனையில் எத்தனையோ 
நித்தமும் தோன்றும்/
அத்தனையும் வெற்றிக் கனி கொடுப்பதில்லை/

முயற்சியும் வீழ்ச்சி 
காண்பதுண்டு/
வீழ்ந்தவன் எழுந்து 
வெல்வதும் உண்டு/

சக்திக்கு மீறிய 
ஆசைகளை  வளர்ப்பதும்/
நிறைவேற்ற முடியாமல் 
நின்று தவிப்பதும்/

மானிடப் பிறவியின் 
கொள்கையில் ஒன்று/
நித்தமும் நினைவுகள்  
நிகழ்வுகளானால் /
இறைவனை மனம் 
மறந்திடும் என்றும்/


No comments:

Post a Comment