Thursday 21 November 2019

நில்லாயோ சோலைக் கிளியே



பாராயோ என்னை 
பச்சைக்கிளியே /
பால் வடியும் 
முகமடி கண்மணியே/

உன் சொல்லு 
எனக்கு நெல்லுமணி /
நீ யும் ஓடாதே 
என் பொன்மணி/
கலங்கிடும் எந்தன் 
இரு கண்ணுமணி/

எட்டி  வாரேன்டி 
ஒட்டிக்க வாடி/
தொடர்ந்து வாரேன்டி  
தொட்டுக்க வாடி/

குசும்பாகப் பேசிக்கலாம் 
ஒண்ணாக சிரிச்சுக்கலாம்/
கண்ணாம் பூச்சி ஆடிக்கலாம் கட்டியணைச்சுக்கலாம் /
நீ நில்லாயோ சோலைக் கிளியே/


No comments:

Post a Comment