Monday 25 November 2019

எரியும் திரியல்ல

நாதாரி பெத்தவனே 
உன் தாயாரு உத்தமியோடா.
உன் தந்தை யார் என்று 
கேட்டறிந்து கூறடா 
மறவாமல் எத் தேசத்து  மைந்தன் 
அவன் என்று சொல்லடா ....!

ஈழத்தின் சுடர் விளக்காய்  
அணையாத ஒளி விளக்காய்.
தமிழன் போற்றுவது 
பிரபாகரனைத் தானடா ....!
விரால் இல்லாத குளத்துக்கு 
குறட்டை மீன் அதிகாரி என்னும்  தோரணையோடா....!

நல்ல பாம்பு  ஆடிய இடத்தில் 
நாக்குப்பூச்சி நீ வந்து நெளியாதேடா.
உருக்குலைந்து போய் விடுவாயெடா 
நின்ற இடம் தெரியாமல் அழிந்து விடுவாயடா.....!

ஈழத்தமிழன் இதயத்தில் 
எரிவது மெழுகு திரி இல்லையடா
விரைந்து அணைந்து விட
அது தீப் பிளம்படா 
நின்று நீ  புலம்பி அதில் வெந்து 
கருகாமல் கிளம்படா....!

     

No comments:

Post a Comment