Thursday 14 November 2019

அருக்காணிப் பொண்ணு



செப்புக் கொடம் 
மேனி சிலிச்சுகிறது /  
இடுப்பாண்டக்க அமர்ந்து 
ஏதோ பேசிக்கிறது/

மொத்தத்திலே நேக்கும்
 தாகம் ஏத்திக்கிறது /
பக்கத்திலே போய்த்தான் 
கேட்டுக்க வெட்கமும் தடுத்துகிறது/

ஆல மரநிழலும் 
அருக்காணிப் பொண்ணும்/
பாத்துக்கிட்ட கண்ணுக்கு 
குளுகுளுப்பாக்க இருக்கிறது/

நாட்டம வருமுன்னே 
கேட்டுக்கணும் /
வீட்டான்ட வந்துட்டு 
போகவா எண்ணு /

விளக்கு வைச்சுக்கும் நேரத்த சொல்லிப்புட்டா/
அவ விபரமான 
ஆளு பொன்னையா/

No comments:

Post a Comment