Tuesday 5 November 2019

காட்டு மல்லி பூத்திருக்கு பறிக்க வா மாமா



காட்டு மல்லி பூத்திருக்கு 
மாமாவே/
வீதியெங்கும் அதன் பேச்சு 
மாமாவே/
வீட்டு நெல்லி காய்த்திருக்கு 
மாமாவே/
தொட்டுப் பறிக்க நாளாச்சு 
மாமாவே/

கூடி விளையாடியதை மறக்கல 
மாமாவே/
கூட்டாஞ்சோறு போட்டவை
நினைவிருக்கு  மாமாவே/
கொல்லையிலே  தலவாழை சிரித்திருக்கு  மாமாவே/
முற்றத்திலே கோலம் விழித்திருக்கு 
மாமாவே/

வெள்ளைப் புறா இறகடிக்கிறது
மாமாவே/
செவ்வந்தியும் வாசலைப் பாத்திருக்கு மாமாவே/
காத்தோட்டமான அறையும் வரவேற்கிறது  மாமாவே /
கட்டிலும் வெட்கப் படுகிறது மாமாவே/

பட்டு உடுத்த ஆவலோ நீளுது 
மாமாவே/
நெற்றிப் பொட்டுக்கும் ஆசையாச்சு மாமாவே/
மெட்டி ஒலி கேட்க வேண்டும் 
மாமாவே/
நெஞ்சில் தாலி உரசிக்க வேண்டும் மாமாவே/

உன் அக்கா வீட்டு மொட்டு /
மலந்திடிச்சு கட்டழகாய் வளந்திடிச்சு மாமாவே/
கொட்டு மேளத்தோடு ஊரைக் கூட்டி/
கரம் பிடிக்க வந்திடு  மாமாவே /

 தேர்வுக்கு நன்றிகள் ❤🙏🙏

No comments:

Post a Comment