Sunday 10 November 2019

நினைவலைகளின் நெடுஞ்சாலை



சொல்லிலே முள் எய்து 
நெஞ்சத்தைப் புண்ணாக்கி/
உறங்கிய கோபத்தை 
இறங்கியே உசுப்பி விட்டு/

நெருங்கிய என்னை 
நெருப்பாக எரிய வைத்து/
இறுதியில் காதலை 
எரியூட்ட வைத்தாய்/

உறுதியாக பிரிவு என்னும் ஒற்றை வார்த்தையை உரைத்து விட்டு /
நீ திசை மாறியே பயணத்தைத் 
தொடர்ந்து விட்டாய்/

நரம்பெங்கும் விசமாக 
ஏறித் தங்கி விட்டது /
உன்னோடு பழகிய இனிய 
நிகழ்வுகள்/

என்னை மறந்து உன் 
நினைவில் ஏங்குகின்றேன் /
என்னமோ நானும் உலகில் இயங்குகின்றேன்/

ஏதேதோ செய்து முடிக்கின்றேன்/
என்னவென்று புரியாமல் 
முடிவில் நின்று முழிக்கின்றேன்/
பேச்சுடன் மூச்சையும் நிறுத்தும் வரை/
உன் நினைவுகளே என் நெடுஞ்சாலை /

ஆ.எஸ்.கலா ( தேர்வுக்கு  நன்றிகள்  ❤🙏)

No comments:

Post a Comment