Friday 30 November 2018

காதல் செய் கள்வனே

நான்கு  விழி
நோக்கிய வேளையிலே /
மான் விழி வழியே என்
உயிர் நுழைந்தவனே /

இரவு தூக்கத்திலே
கனவோடு கலந்து வருபவனே /
கசங்காத என்  சேலை
கசங்கிட வேண்டுமடா சின்னவனே /

யானை சுவைக்காத
செங்கரும்பு உடலடா மன்னவனே /
நுகர்ந்தவாறே மலர் மீது
ஊரும் தேனீபோல் /
நுகர்ந்து சுவைத்திட
நீ வந்து விடு நாயகனே /

செவ்வாழை நானடா /
உன் கரம் கொண்டு /
மாலை மாத்தடா மாதவனே/
உள்ளமதை கொள்ளையிட்டு /
உணர்ச்சியை திறந்து விட்டே சேவகனே /

நித்தம் நான் முத்தமழையிலே/
குளிக்க வேண்டுமடா  /
யுத்தமின்றி காதல் செய் கள்வனே /

  

No comments:

Post a Comment