Thursday 8 November 2018

பிரியாமல் வாழ்வோம்


உறவு என்று நாம் உரிமையாக வில்லை
பந்தம் என்னும் சொந்தத்தில் பலமாக
இணைந்தோம்  சொந்தத்தை  வளர்த்தோம்
பிரியாமல் வாழ்வோம்..!!

உணர்வாலும் உணர்ச்சியாலும்
அன்பாலும் இன்ப துன்பத்திலும்
உதவுவோம் பக்க பலமான உறவு என்று உலகுக்கு உணர்த்துவோம்...!!!

தோள் கொடுப்போம் இறுதி
ஊர்வலத்தின் போது அல்ல
சோகம் கொண்டு துவண்டு விடும்
வேளையிலும்..!!!

நாடு விட்டு நாடு சென்றாலும்
நாகரிக வாழ்வை நோக்கிச் சென்றாலும்.
நாட்டுப் பற்றை நாம் மறக்காது
நினைத்திருப்போம்..!!

மழலைப் பருவ நட்பையும்
தெப்பக் குளக் குளியலையும்
மனதில் ஓட விட்டு  ரசித்துப்
பார்ப்போம்..!!

உடல்  பிரிந்து தொலை தூரம்
வந்த பின்னும் உணர்வால்
நட்புக்களைப் பிரியாமல் வாழ்ந்திடுவோம்.!!

பிரிவு என்பது வாழ்வில் ஒரு  அங்கம்
அதை பட்டா போட்டு தங்க விடாமல்
விரட்டிடவே  மனதில்  அன்பு என்னும்
அதிகாரிக்கு இடம் கொடுப்போம் ....!!

பிரிவு வரட்டும் நாம் நினைவால்
பிரியாமல்  வாழ்வோம் உடலை விட்டு
உயிர் பிரியும் வரை சொந்த பந்தங்களையும்
நட்புக்களையும் நினைவாலும் உணர்வாலும்
பிரியாமல்  வாழ்வோம் ...!!!!

No comments:

Post a Comment