Monday 12 November 2018

ஆருயிர் காதலியே

வெண்ணெய் எடுத்து/
நெய் உருக்கி ஒளி ஏற்றி /
கண்ணை அகல விரித்து  /
உனை நோக்கி ரசிக்கவா ? கண்ணே /

எள்ளு  எடுத்து /
செக்கு மாடு போட்டு  கடைய விட்டு/ அதிலே வாழைத் திரி போட்டு
எரிய விட்டு /
நீ வரும் வழியில் ஒளியோடு /
தவம் இருக்கவா ? பெண்ணே /

விளக்கெண்ணெய் நான்  எடுத்து / விழியை துளக்கி  விட்டு /
விடிய விடிய காவல் காத்து /
உன்னில் இணையவா ? மானே/

தேங்காய் எண்ணெய்யிலே /
நூல் திரி போட்டு /
ஐந்து முக குத்து விளக்கு  ஏற்றி /
தேவதை உன் அழகை/
நான் மட்டும் பார்க்கவா? என்  பார்வதமே /

இத்தனையும் தள்ளி  வைத்து விட்டு / பௌர்ணமி நிலா  ஒளியிலே /
அல்லி முக. அழகுடன் /
பால் வண்ண உடலயும் /
சேர்த்து பாவை மேனியாக /
நான் அள்ளி  அணைத்து மகிழவா ?
சொல்லு என் ஆருயிர் காதலியே /

மல்லிகைப்பூ மெத்தை இட்டு /
மாங்கனியை பக்கம் வைத்து/
பால் கிண்ணம் கையில் கொண்டு /
வரும்  உன்னை  இழுத்து /
செல்லமாய் கெஞ்சி மெல்லமாய் மிஞ்சி/
வெல்லமாய் உன்னை நினைத்து /
எறும்பு போல் மொய்த்து /சுவைக்கவா ?
என் செங்கரும்பே /

சளிக்காமல் நான் ருசிக்க /
மறுக்காமல் நீ பரிமாற /
நிறுத்தாமல் முத்தம்  பதிக்க /
தடுக்காமல் நீ எடுக்க /

நான் கொடுக்கின்றேன் ;
என் துணைக்குத்  துணையாக
தங்கத்தாலி/
மங்கை உன் கழுத்துக்கு /
குங்குமத் திலகமுமிட்டு / சொந்தாமாகவும் ஆக்கிரமித்து விட்டு  /
வைக்கின்றேன்டி கச்சேரி /
நீயும் பாரேன்டி என் பச்சரிசிப்  பல்லழகியே/

No comments:

Post a Comment