வெண்ணெய் எடுத்து/
நெய் உருக்கி ஒளி ஏற்றி /
கண்ணை அகல விரித்து /
உனை நோக்கி ரசிக்கவா ? கண்ணே /
எள்ளு எடுத்து /
செக்கு மாடு போட்டு கடைய விட்டு/ அதிலே வாழைத் திரி போட்டு
எரிய விட்டு /
நீ வரும் வழியில் ஒளியோடு /
தவம் இருக்கவா ? பெண்ணே /
விளக்கெண்ணெய் நான் எடுத்து / விழியை துளக்கி விட்டு /
விடிய விடிய காவல் காத்து /
உன்னில் இணையவா ? மானே/
தேங்காய் எண்ணெய்யிலே /
நூல் திரி போட்டு /
ஐந்து முக குத்து விளக்கு ஏற்றி /
தேவதை உன் அழகை/
நான் மட்டும் பார்க்கவா? என் பார்வதமே /
இத்தனையும் தள்ளி வைத்து விட்டு / பௌர்ணமி நிலா ஒளியிலே /
அல்லி முக. அழகுடன் /
பால் வண்ண உடலயும் /
சேர்த்து பாவை மேனியாக /
நான் அள்ளி அணைத்து மகிழவா ?
சொல்லு என் ஆருயிர் காதலியே /
மல்லிகைப்பூ மெத்தை இட்டு /
மாங்கனியை பக்கம் வைத்து/
பால் கிண்ணம் கையில் கொண்டு /
வரும் உன்னை இழுத்து /
செல்லமாய் கெஞ்சி மெல்லமாய் மிஞ்சி/
வெல்லமாய் உன்னை நினைத்து /
எறும்பு போல் மொய்த்து /சுவைக்கவா ?
என் செங்கரும்பே /
சளிக்காமல் நான் ருசிக்க /
மறுக்காமல் நீ பரிமாற /
நிறுத்தாமல் முத்தம் பதிக்க /
தடுக்காமல் நீ எடுக்க /
நான் கொடுக்கின்றேன் ;
என் துணைக்குத் துணையாக
தங்கத்தாலி/
மங்கை உன் கழுத்துக்கு /
குங்குமத் திலகமுமிட்டு / சொந்தாமாகவும் ஆக்கிரமித்து விட்டு /
வைக்கின்றேன்டி கச்சேரி /
நீயும் பாரேன்டி என் பச்சரிசிப் பல்லழகியே/
No comments:
Post a Comment