Thursday 1 November 2018

கார்குழலாள்

கார்குழலாள் என்று கூறி /
கார்மேகக் கூந்தல்
அழகி என்று உரைத்து /
காணும்  பொழுதெல்லாம் /
கனகாம்பரத் தோட்டமெங்கும் /
கண்ணாலே என்னை சுற்றும் மாமா /

நான் மலராத மொட்டு/
முதிராத மாங்காய்/
உதிராத நாத்து /
கனியாத செவ்வாழை  ஆமா ./

கார் கூந்தலை அள்ளி முடித்து /
நாகச் சடையிட்டு  சூடிக்கோ பூ என்று /
உன் கரம் கொண்டு முளமிட்டு /
மல்லிகை சரம் கொடுக்கும் மாமா /

நான் கட்டோடு கரும்பு /
நீ கிட்ட வந்து  முட்டும்  எறும்பு /
தொட்டு சுவைத்துப்புட்டால் /
விட்டுப் போகும் மானம் /
அது அவமானம்  ஆமா /

கார்குழலாள் என்
மேல் மோகம்  கொண்டு /
நீ உருகிய பனி யாக தாகம் தீர்க்க /
அருவியாக ஓடி வரலாமா மாமா /

நான் பனித்துளி பட்ட புல்லு /
மழைத்துளி  தொட்ட நீர் /
பூங்காற்று தடவிய மலர் /
புயலில் சிக்கிய தென்னங்கீற்று/
ஆனாலும் நான் கன்னி  /
காதலுக்கு இல்லை வில்லி/
நீ நில்லு தள்ளி  ஆமா /

    

No comments:

Post a Comment