Tuesday 29 October 2019

சுஜிர்த் இரங்கல் பா

😭😭😭😭😭😡😡😡😡😡😡😡
**********************************

துடித்த இதயமெல்லாம்
வெடித்துப் போனதே /
வடித்த கண்ணீரும் 
நிலைத்துப் போனதே/

கண்டு பிடிப்புக்கள் பல
இருந்து என்ன பயன் /
உரிய முறையில் 
கையாளவில்லையே/

உரிய நேரத்தில் அவை 
கை கொடுக்கவும் இல்லையே /
பிராத்தனைகளும் 
வீணாகிப் போனதே/

மூன்று நாட்களுக்குப் பின்
சிதைந்த உடலைக் கொடுத்து/
தொட்டு அழாதே 
அணைத்துப் பிடிக்காதே /

கண்ணாடியின்  ஊடாகவே
பார்த்துக் கொள்ளுங்கள் /
என்னும் எச்சரிக்கையோடு  /
சில நிமிடங்கள் வரை ஒரு தாயின்/ 
கரத்தில்  பிள்ளையைக் கொடுத்தாள் 
அவள் என்ன செய்வாள் /

அட விவரம் தெரியாத 
அரலூசுகளா உடலையாவது /
உரிய நேரத்தில் மீட்டிருந்தால் /
பெற்றவள் தன் பாசத்தை /
பரிதவிப்பை அவளது சோகத்தை/ சொல்லியும் கதறியும் 
கட்டியணைத்தும் கண்ணீராகவே 
வடித்துக் கரைத்திருப்பாள்/

தன்  விழி நீரினிலே பிள்ளையைத் துடைத்திருப்பாள்/
தன்னுடைய வலியைக் 
கொஞ்சமாவது சிதைத்திருப்பாள் /
அதற்கும் வழி இல்லாமல் /
செய்து விட்டீர்களேடா  படுபாவிகளா  /

ஒன்று மட்டும் உண்மை  #குழந்தையின் 
பெயரால் துருப்பிடித்திருந்த /
பல ஒளிப்பதிவு கருவிக்கு வேலை கிடைத்திருந்தது /
கட்டணம் இல்லாமலே பல 
மீடியாக்கள் விளம்பரம் ஆனது /
லைக்  வாங்க ஏங்கும் 
சிலருக்குப் புகைப்படமானது /

கவிதை எழுதக் காத்திருந்தோருக்கு 
நல்ல தலைப்புக்  கொடுத்தது /
இதை மையப் படுத்தி  பலர் 
அவர்களது மூஞ்சை /
உலகிற்குக் காட்டி மகிழ்ந்திட /
ஓர் சூழ்நிலை அமைத்துக் கொடுத்தது  /

உன்னால் யார் யாரோ புகழ் தேட /
நீ மட்டும் நீர் இன்றி ஆகாரம் இன்றி/
படுகுழியில் தாயைத் தேடிய படியே
மரணித்தாயேடா  செல்லம் /

உன் பிஞ்சு நெஞ்சம் எதை /
நினைத்த படி  மூச்சை நிறுத்தியதோ ??  
உலகெங்கும் உனக்காகக் 
கண்ணீர் சிந்தினாலும்/

உன் அன்னையின் கண்ணீரே /
உனக்கான நிரந்தரக் கண்ணீர்  /
இன்னும் சில மாதத்தில் இதை மறந்து
 விடும் உலகமடா/
#குறிப்பாக வல்லரசு நாடு என்று 
வாய் கிழியப் பேசுவோரடா /

சென்று விட்டாய் மீண்டும் /
வந்து விடாதே எப்பிறவியிலும் /
இந்தப்  பொல்லாத உலகத்திற்கு/
உமக்காகக்  கலங்கும் விழிகளில் /
நானும் ஒருத்தியடா 😭😭😭😭

#உன் #ஆத்மா #சாந்தி #காணட்டும்

No comments:

Post a Comment