Monday 21 October 2019

21-10-19 (எட்டாக்கனி)



ஏழைக்குப் பட்டதாரி  
ஆசை என்பதும்/
எளியகுலப் பிறவிக்கு 
அரசியல்  என்பதும்/

பயந்தவனுக்கு மாவீரன் 
பட்டத்து நினைவும்/
யுத்தபூமியில் பிறந்தவனுக்கு 
அமைதியான சூழலும்/

விவசாயிக்கு வறுமைக்கோடு 
நீக்கம் அறிவிப்பும்/
கண்ணிலந்தவனுக்கு ஓவியம்
வரையும் ஆவலும்/

கிணற்றுத்தவளை கடலுக்கு
ஏங்குவது போல் /
 என்றென்றும் நிறைவேறாத 
ஆசைகள் எட்டாக்கனியாக/

No comments:

Post a Comment