Saturday 12 October 2019

அறியாயோ மனமே

துடியாய்த் துடிக்கின்றேன் /
மடியாமல் மடிகின்றேன் /
துயிலாமல் விழிக்கின்றேன் /
மரண வாசல் தேடுகின்றேன் /

ஓலமிட்டுப் புலம்புகின்றேன் /
ஓடாகத் தேய்கின்றேன் /
கார் மேகமாக அழுகின்றேன் /
வெண்முகிலாக  அழைகின்றேன்/

பஞ்சாய் எரிகின்றேன் /
உப்பாய்க் கரைகின்றேன் /
மெழுகாய் உருகுகின்றேன் /
காற்றாய் உனைத் தேடுகின்றேன் /

ராக்கோழியாகவே  நான் போனேனடி/
ரங்கோழிச்  சேலைக் காரியே/
என் ஆவியே நீ தான்/
என்று  அறியாயோ பெண் மனமே/

தேர்வுக்கு மிக்க நன்றி 😊❤🌹

No comments:

Post a Comment