Thursday 3 October 2019

சத்துணவு

பள்ளிப் பருவ
நிகழ்வுகளை ஞாபகமாகச்
சொல்லி நகைக்கின்றது
மனம் இன்னும்/

குறும்புகள் புரிந்து
எறும்புகள் போல்
நகர்ந்த நாட்கள்
நினைவிலே இன்றும் /

சத்துணவுத் திட்டம்
அமுலுக்கு வந்ததும்
விடுமுறை எடுப்பது
தேய்பிறையானது /

விரைந்தது கால்கள்
நித்தமும் பள்ளிக்கூடம்
படிப்புக்காக அல்ல
பசி தீர்ப்பதற்காக /

No comments:

Post a Comment