#எ. முதல் எழுத்துக் கவிதை
*****************************
#தலைப்பு (அறிவுரை)
எள்ளானாலும் பகிர்ந்துண்டு
உள்ளம் மகிழ்ந்திடு/
எடுப்பார் கைப்பிள்ளை
வாழ்க்கை வாழ்ந்திடாதே/
எளிய பிறப்பானாலும்
வலிமை இழக்காதே/
எந்தச் சூழ்நிலையிலும்
திருடனாக உலாவிடாதே /
எதிரிக்கும் உயிர்
காக்கா உதவிடு/
எடுக்கும் காரியத்தை
சிறப்பாய் முடித்திடு/
எரிக்கும் சொற்கள்
கேட்டு தயங்கிடாதே /
எப்போதும் தமிழ்
உரைத்திட மறந்திடாதே/
எவ்வலியானாலும் நேர்வழிப்
பாதை நோக்கிடு/
எங்கு சென்றாலும் அன்னையிடம் மறைத்திடாதே/
No comments:
Post a Comment