Saturday 19 October 2019

19.10.19

#எ. முதல் எழுத்துக் கவிதை
*****************************
#தலைப்பு (அறிவுரை)

எள்ளானாலும் பகிர்ந்துண்டு 
உள்ளம் மகிழ்ந்திடு/
எடுப்பார் கைப்பிள்ளை
வாழ்க்கை வாழ்ந்திடாதே/

எளிய பிறப்பானாலும் 
வலிமை இழக்காதே/
எந்தச் சூழ்நிலையிலும் 
திருடனாக உலாவிடாதே /

எதிரிக்கும் உயிர் 
காக்கா உதவிடு/
எடுக்கும் காரியத்தை
சிறப்பாய் முடித்திடு/

எரிக்கும் சொற்கள் 
கேட்டு தயங்கிடாதே /
எப்போதும் தமிழ் 
உரைத்திட மறந்திடாதே/

எவ்வலியானாலும்  நேர்வழிப்
பாதை   நோக்கிடு/
எங்கு சென்றாலும் அன்னையிடம் மறைத்திடாதே/

No comments:

Post a Comment