Tuesday 22 October 2019

22-10-19

வாழமர தண்டே மரிக்கொழுந்து செண்டே
*******************************************

வலங்காபுரி ஆளும் மகராணி 
மவளே/
கொடாரிக் கொண்டைக் காரி 
மவளே/
மோமணம் உடுத்தும் கோமாளி 
மவளே/
வாடியென் வடகப்பட்டி மாமன் 
மவளே/
காட்டிக்கடி கெண்டைக் கால 
என்னவளே /

முறையோடு உன்னை அள்ளப் 
போறேன்/
நுரையாக நானும் பூசிக்கப் 
போறேன் /
புதுக் கதையெல்லம் சொல்லப் 
போறேன்/
இராத்திரித் தூக்கம் பறிக்கப் 
போறேன்/
புது மயக்கம் கொடுக்கப் போறேன்/

சாரை போலே ஊர்ந்திடப் 
போறேன் /
எறும்பைப் போலே சுவைத்திடப் 
போறேன்/
செவ்வாழைத் தண்டான இடையின் 
மேலே/
மெதுவாக முத்தங்கள்  பதித்திடப்
 போறேன்/
அருகே அமரடி வாழத் தண்டேமரிக்கொழுந்து 
செண்டே/

No comments:

Post a Comment