Wednesday 23 October 2019

கேள்வி தொடுக்கும் மரம் (23-10-19)



இயற்கையான என்னை 
அழித்து /
செயற்கைகளை வளர்க்கும் 
மனிதன்/
உதிரும் இலைகளோடு 
வேரையும் /
மறைத்துக் 
கற்கள் பரப்புகின்றான்/
தானே தனக்கு 
வினையாகின்றான்/
மரங்களை அழித்த பின்னே/
மழை கேட்டு வருந்துகின்றான்/

மருத்துவச் 
செடிகளையும் எரிக்கின்றான் /
பின் நோய் தீர்க்க மருத்துவம் 
தேடுகின்றான்/
அதற்காகப் பெரும் தொகைப் 
பணம்  இழக்கின்றான்/
நாட்டு வைத்தியத்தின் நன்மை அறியாதவன் /
கூட்டு அறிவின் வைத்தியத்துக்கு
அலைகின்றான் /

மழைக்குக் குடையாக /
மழலைக்குத் தொட்டிலாக/
வெயிலுக்கு  நிழலாக/
கோலாட்டத்திற்குக் குச்சியாக/
தாலாட்டக் கட்டிலாக/
கூடி வாழும்  குடிசைக்குக்  
கூரைகளாக/
கூன் விழுந்ததுமே  ஊண்டு 
பொல்லாக/

உயிர் திறந்து விட்டால்  
உமது  உடலுக்குப் பாடையாக/
உன்னுடனே உறவாடி /
உன் இறுதிப் பாதை வரை 
வரும் எங்களை /

ஒரு நொடி நினைத்துப் பார்த்து/ 
இரக்கத்தைக் கொடுத்திட / 
அறுப்பதை நிறுத்திட /
அழிப்பதைப் போக்கிட/
மனிதம் இல்லாமல் போனதே /
ஏனடா ? மனிதா உமக்கு /

தேர்வுக்கு நன்றிகள் ❤🙏🙏

No comments:

Post a Comment