திறமைகளே
விழித்தெழு.
***************
அடங்கியதும்
அடக்கியதும்
போதும் மனமே.
அகிலமெங்கும்
என் புகழ் பரப்பிடவே .
அச்சம் தவித்து
ஊக்கம் விதைத்திடு.
அடுக்கடுக்காய்த்
திறமையும்
வேகிறது
அடுக்களையிலே .
அதற்கு
வெளிச்சமிடப்
போகிறேன்
உலகினிலே.
அடியெடுத்து
வைத்திடலாம்
திறமைகளே
விழித்தெழு.
அடுத்தவை
என்ன
தடைத்திரை
கிழித்தெழு.
உள்ளத்திற்கு
அள்ளிக்
கொடுத்திடுவேன்
பெருமைகளை.
No comments:
Post a Comment