ஆரணங்கே
***;***********--***
ஆரணங்கே கதை
கூறக் கேளும் /
கேட்கையிலே உமக்குள்
எழும் ஞானம் /
ஞானசத்தி கொண்டவள்
அன்னபூரணியாய்
ஆர்ப்பரிப்பானவள்/
ஆர்ப்பரிப்பால் ஊருக்கே
அவளோ அன்னையானாள் /
அன்னை வடிவிலும்
லட்சுமி உருவிலும்/
உருவமே அருவுமாகி
நாட்டையே ஆளுகின்றாள்/
ஆளுமை கொண்டு
நேர்மையில் வென்றாள் /
வென்று பெற்றாள்
மக்களை ஆரணங்கே/
No comments:
Post a Comment