Monday, 29 July 2024

கிராமியக் கவிதை

ஓரவிழிப் பார்வையில்
ஓதுவது என்னவோ.?
*************************
ஓரவிழிப் பார்வையில்
ஓதுவது என்னவோ ..?
ஓரமாய் காதிலே
ஓசையின்றி அழைக்குதோ..?
ஓடும் எண்ணங்களை 
ஓயாமல் உரைத்திடவோ..?
ஓடிவருகையிலே கொலுசும்
ஓசைஒலி கொடுத்திடாதோ.?

ஓடாமல் பாடாமல் 
ஓரிடத்து விழிகளிரண்டும்/
ஓரங்க நாடகம் காட்டுதே
ஓய்வுஒழிவு இல்லாமல் /
ஓரமாக வந்தாலே 
ஓசியிலே வாசமும் வீசுதே /

ஓர்ப்படி போயித்து
ஓம்சக்தி காதல்பக்தியடி/
ஓயாதலையாய் உள்ளூரம் 
ஓங்கியடிக்கிறது ஆசைகளடி/
ஓய்வூதியம் கிடைத்திடுமா
ஓரளவாயினும் உனது அழகிற்குமடி
ஓங்கார ஒலியாக சொல்லடி ரதியே/

ஆர் எஸ் கலா

No comments:

Post a Comment