உள்ளங்கவர் ஓவியமே
*************************
உள்ளங்கவர் ஓவியமே
இளங்காலை நாயகியே/
பனிப்பார்வையைப்
படரவிட்டேன்
துளிக்குளிர் ஏற்றுதடி/
உனது கருவிழிகளில்
மின்னிடும் காந்தொளி./
உனக்காகக் கவிதைகள்
வடித்திடவே தமிழ்மொழி /
எடுத்து தனிக்கை
செய்திடவா பெண்ணே/
செந்தமிழ் கொண்டு
சந்தனக் கன்னம் /
புகழ்ந்து பாக்கள்
வரைந்திட முயற்சிக்கவா/
தேன்சுவைச் சொல்லால்
இதழ்களின்
அழகையுரைத்திடவா /
எதைக் கொண்டு
உன்னை வரைந்திடுவேன்/
எனைத் தந்து இதயத்திலே
அச்சிடுகிறேன்/
ஓரளவு ஓசையிலே
ஓரப்பார்ரைக்கு
இசையமைப்பேனடி/
பிடியாது என உரைக்காதேடி
மடிந்திடுவேன் நானுமடி /
கரம் பிடித்தபின்னே
தடியும் நானாவேனடி/
ஆயுள் நீளும் வரையும்
தோளாயிருப்பேனடி /
No comments:
Post a Comment