வணக்கம்
நடுவர்அய்யா அவர்களுக்கு 🙏
அமைதி கொடுப்பது
ஆன்மிகப் பயணம்
மகிழ்ச்சி கொடுப்பவை அல்ல.
ஆகையால் மகிழ்ச்சி கொடுப்பவை உல்லாசப் பயணமே.
ஆன்மிகம் என்பதை அறியாத
வயதில் உள்ளோரையும்
அழைத்துச் செல்கையில்
வாழ்வின் இன்பம் பெருகிடும் .
புரிதல் கிடைக்கும்.
உற்றார் உறவினரோடு .
ஒரு சந்திப்பாகப் அமைந்திடும் .
எப்போதும் வேலை வேலை
என்று வீட்டோடு இருக்கும் .
இல்லாளுக்கு ஒரு மாற்றமான
மனநிலை கொடுக்கும் .
அறியாதவைகளையும்
தெரியாத காட்சிகளையும் .
காண்கையில் மனமும்
குடும்பமும் மகிழ்ச்சி அடையும் .
முன்பே அறியப் பட்டு
காண வில்லை என்ற ஏக்கம்
தொலையும் .உண்மையைச்
சொல்ல வேணுமாயின் .
மாதம் அல்லா விட்டாலும் .
ஆண்டுல் ஒரு முறையாவது
மனைவி மக்களோடு
உல்லாசப் பயணம் செல்வதே
சிறந்த வழியாகிடும்.
.பக்தியோடு அருகே இருக்கும்
ஆலயம் கூட சென்று வரலாம். அவசரத்தோடும் அதை
ஓடிப் போய் செய்து முடிக்கலாம்.
ஆனால் உல்லாசப் பயணம் .
திட்டம் போட்டு பணம் சேர்த்து .
நேரம் ஒதுக்கி பயணிப்பவை .
இது எல்லோருக்கும் கிடைத்திடாத
வாய்ப்புகள். அதை நாமே
உருவாக்கிக் கொள்வது
என் கருத்து உல்லாசப் பயணமே
மகிழ்ச்சி அளிப்பவை எனக் கூறி
விவாதத்தை நிறைவு செய்கின்றேன்.
நன்றி 🙏
No comments:
Post a Comment