Thursday, 18 July 2024

விவாத மேடை

வணக்கம் 
நடுவர்அய்யா அவர்களுக்கு 🙏

அமைதி கொடுப்பது 
ஆன்மிகப் பயணம் 
மகிழ்ச்சி கொடுப்பவை அல்ல.

ஆகையால் மகிழ்ச்சி கொடுப்பவை  உல்லாசப் பயணமே. 
ஆன்மிகம் என்பதை அறியாத 
வயதில் உள்ளோரையும் 
அழைத்துச்  செல்கையில் 
வாழ்வின் இன்பம் பெருகிடும் .
புரிதல் கிடைக்கும். 
உற்றார் உறவினரோடு .
ஒரு சந்திப்பாகப் அமைந்திடும் .
எப்போதும் வேலை வேலை 
என்று வீட்டோடு இருக்கும் .
இல்லாளுக்கு ஒரு மாற்றமான 
மனநிலை கொடுக்கும் .

 அறியாதவைகளையும் 
தெரியாத காட்சிகளையும் .
காண்கையில் மனமும் 
குடும்பமும் மகிழ்ச்சி அடையும் .
முன்பே அறியப் பட்டு 
காண வில்லை என்ற ஏக்கம் 
தொலையும் .உண்மையைச்
 சொல்ல வேணுமாயின் .
மாதம் அல்லா விட்டாலும் .
ஆண்டுல் ஒரு முறையாவது 
மனைவி மக்களோடு 
உல்லாசப் பயணம் செல்வதே 
சிறந்த வழியாகிடும்.

.பக்தியோடு அருகே இருக்கும் 
ஆலயம் கூட சென்று வரலாம். அவசரத்தோடும் அதை 
ஓடிப் போய் செய்து முடிக்கலாம்.
ஆனால் உல்லாசப் பயணம் .
திட்டம் போட்டு பணம் சேர்த்து .
நேரம் ஒதுக்கி பயணிப்பவை .
இது எல்லோருக்கும் கிடைத்திடாத
வாய்ப்புகள்.  அதை நாமே
உருவாக்கிக் கொள்வது  
என் கருத்து உல்லாசப் பயணமே 
மகிழ்ச்சி அளிப்பவை எனக் கூறி 
விவாதத்தை நிறைவு செய்கின்றேன்.

            நன்றி 🙏

ஆர் எஸ் கலா

No comments:

Post a Comment