Friday, 27 September 2019

முதல் சொல் கவிதை #கொ

கொன்றைவேந்தன் ஆத்திசூடி 
நன்றாய்ப் பயின்றவன் /
கொடும்பாவி
என்று பெயர் பெற்றான்/

கொடும் கோபம் கொண்டு
கடுஞ்சொல் வீசுகின்றான் /
கொள்ளை அழகுடைய
நல்ல பிள்ளை/

கொள்கை மாறியதாலே
அவனுக்கு அவப்பெயரானது /
கொச்சை வார்த்தைள்
ஏராளம் தாராளம் /

கொட்டுகின்றான் 
யார் முகமும் பாராமல் /
கொடுமையிலும் கொடுமை
குலத்துக்கே கேடானப்பிள்ளை /

கொஞ்சம் கொஞ்சமென
நாசமாகிப் போனதே /
கொம்புத் தேவரின் மகனது  வாழ்க்கையானது/

No comments:

Post a Comment