மாலைப் பொழுதின்  மயக்கத்திலே /
மடி சாய்ந்திடவே ஏக்கம் 
எழுகின்றதே மனதினிலே /
மாமன் வாழும்  பெண் நெஞ்சமே /
மயக்கம் ஏக்கமானதோ? சொல் நெஞ்சமே /
சோலைக்குயிலும்  சோடியோடு கூவிட /
மதுரை மல்லிகையைக்  கிள்ளிப் பார்க்க வரும்  பொன்வண்டும்  இணையோடு வட்டமிட /
தனிமைக்குத் துணையென்று 
தென்றலும்  மரக்கிளையைத்  தொட்டு விலக /
கட்டை விரல் பிடித்த படி 
பக்கவாட்டில் ஒரு சோடி உலாவ /
ஆசை உள்ளம் மோக வெள்ளத்தில் விழ/
விழிகளிரண்டும்  துழாவுகின்றது 
அன்பான நாயகன் எங்கேயென /
No comments:
Post a Comment