Sunday, 22 September 2019

மாலைப் பொழுதின் மயக்கத்திலே

மாலைப் பொழுதின்  மயக்கத்திலே /
மடி சாய்ந்திடவே ஏக்கம்
எழுகின்றதே மனதினிலே /
மாமன் வாழும்  பெண் நெஞ்சமே /
மயக்கம் ஏக்கமானதோ? சொல் நெஞ்சமே /

சோலைக்குயிலும்  சோடியோடு கூவிட /
மதுரை மல்லிகையைக்  கிள்ளிப் பார்க்க வரும்  பொன்வண்டும்  இணையோடு வட்டமிட /
தனிமைக்குத் துணையென்று
தென்றலும்  மரக்கிளையைத்  தொட்டு விலக /
கட்டை விரல் பிடித்த படி
பக்கவாட்டில் ஒரு சோடி உலாவ /

ஆசை உள்ளம் மோக வெள்ளத்தில் விழ/
விழிகளிரண்டும்  துழாவுகின்றது
அன்பான நாயகன் எங்கேயென /

No comments:

Post a Comment