ஏழை என்பதைக் கை விடு./
ஏழ்மையைக் குறித்து 
அடிமையாவதை தவிர்த்திடு./
உழைப்புக்குத்  
தகுந்த ஊதியம்
கொடுப்போருக்கு 
கை நாட்டு வைத்திடு./
உறவானாலும் உரிய 
ஊதியம் பெற்றிடு./
அன்றாடம் 
வாழ்கையிலே விஷ 
நாகம் வந்து 
முட்டும் தட்டி விடு./
உன்னைக்  
கொத்தாமல் தடுத்திடு./
அதிகார தோரணையில் 
பேசுவதை மறந்திடு./
தினமும்  வாழ்வை 
அன்பாக கழித்துவிடு./
உள்ளம் 
குமுறவைக்கும் 
கள்ளச் 
செயல்களை விட்டு விடு./
உயர்தர 
மனிதனாக வரம் பெற்று விடு./
 பரிதாப நிலை 
கண்டு பதறி விடு./
பாரா முகமாக 
இருப்போரை விரட்டி விடு./
அச்சு வெல்லமானாலும் 
நஞ்சு உண்டு
என்று கற்று விடு./
அஞ்சா நெஞ்சம் கொண்டவன் 
என்று பெயர் பெற்று விடு/
No comments:
Post a Comment