Friday, 13 September 2019

மனதோடு

காதல் கவிதை
--------------------------
மனதோடு மழைக்காலம்
---------------------------------------

உள்ளக் குழியில்
கீறிய காதல் காயம் 
வடுவாய்ப் போனதே//
கன்னக் குழியில் மயங்கிய
இளமையும் முதுமையானதே//

மௌன மொழி உரைத்த
ஊமை விழிக்கும் 
பார்வை மங்கலானதே//
விழி வழி ஊடுருவி குருதியிலே
கலந்திருந்த  காமக் கிருமியும்
காணாமல் போனதே//

விண்ணையும் மண்ணையும்
கற்பனையில் இணைத்து//
உன்னையும் என்னையும்
அதற்குள்ளே திணித்து//
கவிதைகளைப்  புனைந்த
மூளையும்   மழுங்கிப் போனதே//

எடுப்பாக இருந்த சுருட்டை
முடியும் முறுக்கு  மீசையும் 
நரைத்துப் போனதே//
திருட்டுக் காதலை
முரட்டுத்தனமாகக்
கிறுக்கிய கள்ளிச் செடியும்
அழிந்து  போனதே//

மரண ஓலைக்கும்
விலாசம் கிடைத்து விட்டது//
மரணப்படுக்கையும்
படுத்தாகி விட்டது//

மயங்கிய நெஞ்சம்
மயக்கம் இழக்கவில்லை //
மார்பில் முகம் புதைத்த
மங்கையவளின் முகமதை
மறக்கவில்லை //

வாலிபக் காதல் 
மாறவில்லை//
நேச அலை ஓயவில்லை/ /
என்னுள்ளே ஓயாத தூறலாய் 
மனதோடு  மழைக் காலம் //

No comments:

Post a Comment