Sunday, 22 September 2019

கூடு தேடும் குயிலு ஒண்ணு

கூவிக்கத் துடிக்குது.!
கூவத்திலே குளிக்குது.!
வாழ்ந்திடத்தான் நினைக்குது.!
வழி தவறியே
பிறந்திட்டதால் தவிக்குது.!

ஊரும் உமிழுது.!
உறவுங்களும்  வெறுக்குது.!
உசுரைக் கொடுத்தவரு எங்கே?
எண்ணு  காலமும் கேள்வி கேக்குது.!
பெத்திக்கிட்ட ஆத்தாவோ மௌனமாயிருக்குது.!

காதலும் தான் கதவத் திறந்திடிச்சு.!
காமமும் முழுவதும் கொடுத்துடிச்சு.!
மோகமும் முழுமை அடஞ்சிரிச்சு.!
அவமானத்தோட மானமும் நாறிடிச்சு.!

கண்ணானம் என்ற
ஒண்ணு எனகில்ல.!
யேன் ..தோலுக்கு
மால வரப்போவதில்ல .!
வாழ்க்க அது எனகில்ல.!
நானோ வாழா வெட்டியாகவே
வாடிக்கிட்டு இருக்குற முல்ல.!
காரணம் தான் யென்ன?
நானு தாசி வீட்டு பிள்ள.!

No comments:

Post a Comment