உள்ளமென்னும் வெள்ளத்திலே
ஓடமானவளே /
இதயமென்னும் தோட்டத்திலே
பூத்துச் சிரிப்பவளே /
நெஞ்சம் என்ற பஞ்சணைக்கு
உரிமையானவளே /
ஓடும் குருதியின் அணுக்களோடு
நெருக்கமானவளே /
ஏழ்மையில் இருந்து மீண்டிட /
இல்லற வாழ்விலே இன்பமதைப் பெருக்கிட /
பொன்னாரம் போட்டு என்னவளை
காண்ணாரப் பார்த்திட /
அயல் நாடு கடந்தேனடி சின்னவளே /
இரண்டு ஆண்டு கடக்க இரு
மாதம் உள்ளதடி இனியவளே /
இதழிலே புன்னகை பிறக்க திறந்த விழியோடு தலை வாசல் நோக்கடி /
என் மனம் எங்கும் காதல் மணம்
பரப்பிட/
நிறைந்த பாசத்தோடு விரைந்து வருகின்றேனடி /
எனது ஆத்மாவை ஆளும்
பிரியமானவளே /
No comments:
Post a Comment