Monday 11 February 2019

காலிக் குடத்துடன் காவந்து தானோ?

காலிக் குடம் தூக்கி
காவந்து செய்வானோ.?
காணி நிலம் இருக்கு
நீர் இல்லாத இடத்தில்
பயிரிட்ட விதையானேன்..../

நீர் இறைக்கக் கரம் உண்டு /
நீர் கிடைக்க இடம் இல்லையே../

கால் வலிக்க நடை போட்டும் /
காலிக் குடம் நிறம்பவில்லை...!/

நிறை குடம் சுமக்க என்
இடை காத்திருக்க /
ஏனோ அதன் ஏக்கம் /
தீரவும் வழி கிடைக்கவில்லையே./

காலிக் குடம் தூக்கி /
வேலி தாண்டி விட்டேன்  /.
ஓடை நீர் தேடி உறவுகளோடு
புறப்பட்டேன்../

வாடி விட்டேன்  /
வடித்துக் குடிக்கும் /
அளவும் நீர் கிட்டவில்லை./
காலிக் குடத்தோடு /
காவந்து தானோ காலம்
பூராவும்  இறைவா?.

     

No comments:

Post a Comment