Monday 18 February 2019

என் பொன்ன மச்சானே

இயற்கைக் காட்டினிலே/
சல சலக்கும் ஓடையின் பக்கத்திலே/
உயர்ந்த மர நிழலின் கீழே/
குளிர்ந்த தென்றல் தடவும் வேளையிலே /

செயற்கை பாத்திரத்திலே/
கொதிக்கும் குழம்பிலே/
குதிக்கும் குளந்து மீனைப் போட்டு/
சுவையாக சமைத்து நான் தருவேன் /

உண்ட மயக்கம் தீர மலையருவியிலே/
மனம் வெறுக்கும் வரை குளிக்க
நான் விடுவேன்/
குட்டைக் கல்லில் நின்ற படியே
புகைப் படமும் எடுத்துக் கொள்ள
நானும் கூடவே இணைந்திடுவேன்/

கல்லோடு மோதி மலர் நீரில் விழுந்தோடையிலே /
காற்றுடன் நாத்து விளையாடையிலே
கரம் கோர்த்த படி நாம் பார்த்து
வியர்ந்திடவே வந்து
விடு என் பொன்ன மச்சானே/

    

No comments:

Post a Comment