Sunday 17 February 2019

மன்னிக்காது

தன் பிள்ளைக்கும் /
அடுத்தவன் பெற்ற பிள்ளைக்கும் /
வேற்றுமை தெரியாத நீயும் /
ஓர் தாய் தந்தையாகிடலாமோ?

ஈழத்து மண்ணுக்காக /
மார்பை உயர்த்தி போர் இட்ட /
வேங்கைகளின் நிழல் படத்தை /
மாட்டி எல்லைச் சாமிகளுக்கு
வீர வணக்கம் /

என்னும் வாக்கியத்தோடு /
அஞ்சலி கவிதைகள் /
அடடா இவைதான் உங்கள் /
நாட்டுப் பற்றோ ?

தன் நாட்டுக்காக உயிர்
கொடுத்தவர்களை /
அடையாளப் படுத்த முடியாத /
நீயெல்லாம் உரைக்கின்றாய்
ஜெய்ஹிந்த் என்று /

ஈழத்து மண்ணில் புதைக்கப்பட்ட/
வீரர்களின் முக வெட்டுக்கள் /
எத்தனை ஆண்டு கடந்தாலும்/
மறைக்கப் படவோ -
மறக்கப் படவோ மாட்டாது/

ஈழத் தமிழன் கொண்டது நேசமட /
ஈழமே அவர்களின் சுவாசமடா/
நேற்று இறந்தவைனை /
இன்று அடையாளம் தெரியாத
அளவு நகர்கின்றது /
உங்கள் தேச பக்தி அடக் கொடுமையே /

புகைப் படம் கிடைக்கா விட்டால் /
என்ன ?கண்ணீர் அஞ்சலியை /
நெஞ்சோடு இணைந்த சோகத்தை /
பதிவாகப் போடலாமே?

இன்னொருவன் அவனது  நாட்டுக்காய்/
அவனது இலட்சியத்துக்காய் /
அஞ்சாமல் போரிட்டு /
பலர் நெஞ்சிலே ஒளி விட்டு/
இன்றும் எரிமலையாய் குமுறும் /
அந்த வீரர்களின் புகைப்படங்களைப்
போட்டு /

உங்கள் நாட்டுக்காய் இறந்த/
வீரர்களை அவமதிக்கவோ /
அவமானப் படுத்தவோ செய்யாதீகள்/ அவர்கள் ஆத்மாவும் /
உங்களை மன்னிக்காது /
👎👎👎👎👎👎👎👎👎

(சிரிப்பு வருகிறது பலரின்
அஞ்சலி பதிவில் உலாவும் புகைப்படங்களைப் பார்க்கையிலே)

No comments:

Post a Comment