இந்தப் பெண்ணின் மனம்
சொக்கிப் போச்சு/
என்ன சொக்குப் பொடி/
போட்டாயோ? ராமா ....அட ராமா.......\
இந்தக் கன்னி உள்ளம்
கெட்டுப் போச்சு/
கண்டபடி ராமா....அட ராமா......\
பிண்ணிப் புரண்டு இருக்கும்/
இரட்டை நாகம் போல் /
உன் வட்டமுகமும் என் விழிகளிலே/
உருளுகின்றதடா ராமா...அட ராமா.......\
காற்று நிறைப்பிய பலூண் போலே/
உன் ஆசை என் இதயத்தை
நிறப்பி விட்டதடா ராமா...அட ராமா.....\
கட்டி இழுக்கிறது கற்பனை கட்டில் வரை/
வெட்கம் விட்டு உன்னைக் கட்டி
அணைக்கவே ராமா....அட ராமா.......\
நீயும் குட்ட நொட்ட சொல்லாமல்/
கிட்ட வந்து விடு ராமா...அட ராமா......\
பட்டம் போல் என் திட்டமெல்லம்/
வட்டமிடும் வேளையிலே ராமா..அட ராமா\
படிக்கப் பல பாடம் உண்டு /
நாமும் படிப் படியாகப் படிக்கலாமா?
ராமா....அட ராமா.....\
சொக்கத் தங்கமடா நான் /
தொட்டு எடுக்காத தங்கமடா
ராமா....அட ராமா......\
மல்லு வேட்டி நாட்டாமை மகனே ராமா/
உன் மேலே வந்து விட்டது
காதலடா ராமா........அட ராமா.....\
காடு நாடு ஆழ வேண்டாமடா/
ராமா நீ வந்து விடு என்னை
ஆளவே ராமா.....அட ராமா.....\
கனவில் நீ வந்தாயெடா ராமா /
மயங்கி நின்றேன் ஏக்கங்கலும்
தந்தாயெடா ராமா /
கலங்கி நிற்கின்றேனடா ராமா.அட ராமா\
ராத்திரியில் நான் ராமா ராமா
என்று புலம்புவதைக் கண்டு /
என் தலையணையும் பொறுமை இழந்து/
நழுவி விட்டதடா இன்று ராமா..அடராமா...\
No comments:
Post a Comment