Friday 1 March 2019

அயல் நாட்டுக் காதல்

மனம் திறந்தேன் மனதினில்
உனை வைத்தேன் மனம் கவர்ந்த
மணாளனாக நினைத்தேன்
மறைத்தே உன்னைக் காத்தேன்.....////

(மா)  (பலா)  என்ன சுவை
உன் வார்த்தை தானே இனிமை
அருளாக வேண்டும் உன் அன்பு தானே
ஆறுமுகன் பெயர் கொண்டவனே.....///

கண்ட இடமெல்லாம் காணும்
ஆலயத்தில் கையேந்திக் கேட்பது
வரமாய் உன் உறவைத்தானே
நான் தொழில் புரியும் வேளையிலும்
என் விழியில் ஒளியாக தோன்றுவதும்
உன் எழில் முகம் தானே. ......////

வட்டமிடும் பட்டாம் பூச்சு உனை
எதிர் பார்த்து வாட்டமுடன் இருக்கும்
செங்கமலம் நான்தானே.....////

வாழ்க வாழ்க என்று வாழ்த்துவோர்
வேண்டாம் வாழ்வோம்  நாம் வந்து
விடு மன்னவனே......//////

பிறந்த. நாடு எந்த நாடாகவும்
இருந்துட்டுப் போகட்டும்
இறக்கும் போது வேண்டும்
உன் வீடுதானே....../////

பிறந்த மண்ணில் புதையுண்டு
விட ஆசைதான் அதற்கு முன்
முகம் புதைக்க வேண்டும்
உன் மார்பினில் தானே......./////

உன் பாதம் தொடரும் துணையாக
வேண்டும் நான் கல்லறை சென்ற
பின்னும்  அங்கே அந்த நினைவினில்
மகிழ்ந்திட வேண்டும் என் ஆத்மா தானே.....////

     

No comments:

Post a Comment