Saturday 16 March 2019

ஏனிந்த மயக்கம்

காந்தக் கண் கண்டேன்
என் நாணம் மறந்தேன் /
அழகிய உரை கேட்டேன்
அனுதினமும் உனை நினைத்தேன் /

முறுக்கு மீசைக் காரா
முறுக்கி எடுக்கிறது உன்
மேல் எழும் ஆசையடா /
கருத்த கன்னத்திலே
கிறுக்குத்தனமாக ஓர்  முத்தம்
கேட்டிடவே ஆசை முட்டுதடா /

ஒரு நொடி உனைப் பார்த்தேன்/
மறு கனம்  மயக்கம் கொண்டேன் /
என்ன மந்திரம் செய்தாயோடா ?
தந்திரத்தில் வசியம் வைத்தாயோடா /

ச்சும்மா  ச்சும்மா  சிரிக்கின்றேன் /
மாமா என்று உன்னை தனிமையிலே
நின்று  ரகசியமாக அழைக்கின்றேன் /
ஊசி மிளகாய்  சொல் காரி என்னை
சொக்க வைத்து விட்ட கதை கேளடா /

மயங்கிய மங்கை கரம் பிடிப்பாயோ?
மயக்கம் மட்டும் கொடுப்பாயோ?
கட்டில் இடுவாயோ ?கட்டி அணைப்பாயோ? நான் அறியேன்/ பெண்மை உன்னைக்  கண்ட நாள்
முதல் மயங்கியவை உண்மையடா ./

No comments:

Post a Comment