Wednesday, 21 August 2024

புதுக்கவிதை

கனவில் வந்தவளே
கண்முன் வருவாயா.
*************************
கனவில் வந்தவளே
கண்முன் வருவாயா?
நினைவைத் தின்றவளே
நித்திரைக்குமுன் நிற்பாயா?

பசியைக் கலைத்தவளே
புசித்திடவே அழைப்பாயா?
பருவம் உணர்த்தியவளே
புருவம் திறந்திடுவாயா?

உளறல் கொடுத்தவளே
உள்ளத்தைத் தருவாயா?
உயிரைக் குடிப்பவளே 
உயிரோடு இணைந்திடுவாயா?

ஏங்கித்தவித்திடச் செய்தவளே 
ஏக்கம் கரைத்திடுவாயா?
ஏகாந்தமான என்னவளே 
ஏமாற்றம் கொடுத்திடுவாயா?

காத்திருக்கச் செய்திடுவாயா?
சேர்த்தணைக்க இணங்கிடுவாயா?
திரையிட்டு மறைத்திடாமல் 
முறையொன்றோடு வந்திடுவாயா?

ஆர் எஸ் கலா

சான்றிதழ்

Monday, 12 August 2024

பிரியாதே என்னை விட்டுப்
பிரியமானவளே(னே)எந்நாளும்.
****************************************
#பிரியாத வரமொன்று நான் 
கேட்பேன்.
#பிரிவொன்று வருமாயின்  தானே இறப்பேன்.
#பிழையென்று உரைப்போர் பலர் 
உண்டு.
#பிறருக்குத் தெரியுமோ ஆழக்காதல் என்று.

#பிறந்தேன் எதற்காகவோ மலர்ந்தேன் உனக்காக.
#பிசைகிறதே நெஞ்சையும்
பிணைப்பின் நினைவாக.

#பிறகு எவ்வண்ணம் நான் மறவேனடா.
#பிச்சிப்பூவாய் பெண்மையிடம்
 மென்மையான உள்ளமடா/
#பிச்சுப் போட்டு விட்டுப்
போகாதேடா

#பிரமன் அழைக்கும் நாள் வரையிலும்.
#பிடியின் தடியாவோம் ஒருவருக்கு ஒருவராகவேடா.
#பிரியாதே என்னை விட்டுப்
#பிரியமானவளே(னே).எந்நாளும்.

ஆர் எஸ் கலா
ஆர்ப்பரிக்கும் வெள்ளம் அதிருதே சூழல்
*************************************************
ஆர்ப்பரிக்கும் வெள்ளம் அதிருதே சூழல்.
ஆதாயம் தேடி சேதாரமாய்ப் போனதே.
ஆட்சியும் சில மக்களும் உணரவில்லை.
ஆபத்து நெருங்கிய பின்னே சிந்தனை.

ஆடிமழை கூடிப் பெருக்கு எடுக்கும் .
ஆற்று வெள்ளம் அணை உடைக்கும் .
ஆங்காங்கே தேங்கும் குழி இருக்கும்.
ஆழி தேடி ஓடிவிட வழியில்லை.

அத்தனையும் அடைப்பு மொத்தமாய் அவகரிப்பு.
அடுக்கு மளிகையிலும் ஓலைக்குடிசையிலும்  
மழைநீரின் இருப்பு.

ஆர் எஸ் கலா

Sunday, 11 August 2024

ஏமாறாதே பிறரை ஏமாற்றாதே
************************************
தோற்றம் கண்டு 
நீயும் ஏமாறாதே./
சுயநலம் கொண்டு 
பிறரையும் ஏமாற்றாதே./

பாவிகளை நம்பிடாதே
பாவத்தை விதைத்திடாதே./
பாசாங்கான பாசம்
கொண்டோரை நெருங்கிடாதே/
யாவரும் ஒன்றென 
எண்ணம்  விதைத்திடாதே/

கொடுப்பதைக் கெடுக்காதே 
கெடுவாரோடு இணங்காதே /
அடுத்தவனுக்குக் குழியிடாதே
குழியிடுவோருக்கு இரங்காதே/

பறித்தெடுத்தல்  நிலைத்திடாதே 
விரும்பியிடுவதை  மறுத்திடாதே/
மனிதனே மனிதமோடு 
வாழ்ந்திட மறந்திடாதே /

    ஆர் எஸ் கலா

சமூகக்கவிதை

இயற்கையே உனக்கு 
ஏன் இந்தச் சீற்றம் .
***********************
இயற்கையே பொறுத்து
அருள்ளால் என்ன ?
மக்களை ஏற்றுக் 
கொண்டு மகிழ்ந்தாலென்ன ?
உன்னையே நம்பி 
உன்னிலே தஞ்சமானதை /
நீயும் மறப்பதில்
நியாயமோ சொல் அன்னையே/

எத்தனை உயிர்கள் 
அத்தனை ஆத்மாவின் /
ஆசைகளையும் தேவைகளையும்
அறிந்தவள் நீ அல்லவோ/
பாவம் தீர்க்கவா 
நீராகவே பயணித்தாய் /
இப்போது  நீயே பாவியானாயே 
மனிதர்கள் இடையினிலே/

சீற்றம் குறைத்திடு 
அழிப்பை நிறுத்திடு /
வேண்டுதலை ஏற்றிடு 
உயிரினங்களைக் காத்திடு நீயே /

ஆர் எஸ் கலா

Saturday, 3 August 2024

அன்னக்கிளியே

அன்னக்கிளியே
**********************

நிலவென நின்றாளே 
நினைவினைக் 
கொள்ளையிட்டாளே /
நிமிடங்கள் தாண்டியும் 
நில்லாமல் துடிக்கும் /
இதயத்தைக்  கொன்றாளே 
நிலமையை யாரிடம் /

சொல்வேன் தூதென
யாரைத்தான் விடுவேன்/
துள்ளும் பருவமடி 
அள்ளும் உருவமடி/
கள்ளுப்போல் போதையடி 
சொல்லிக்கொள்ள வேணுமடி/

ஒத்தை ரோஜாவும் 
ஒத்தனம் போடுதடி/
மொத்தமாய் மோகமும் 
மேகமென 
 மெத்தையிடுகின்றதடி/
சந்தையிலே சொந்த 
பந்தம் கூடுமடி/
மந்தைவெளியிலே 
வந்து விடு அன்னக்கிளியே /

ஆர் எஸ் கலா

Thursday, 1 August 2024

கண்ணுக்குள் ஒரு காதல்

கண்ணுக்குள் ஒரு காதல்
********************************

கண்ணுக்குள் ஒரு 
காதல் உருவாக்கியவளே/
கனிந்து பழம் 
பறிக்கும் முன்பாகவே/

பிரிந்து செல்வது 
நியாயமோ என்னவளே/ 
மண்ணுக்கு இரையாகி
விண்ணுக்கு விரைந்தாலும்/

பெண்ணுக்கு கொடுமை
இளைத்திடாது என்னிதயம்/
நுண்ணங்கி போல் 
உள்ளம் நுழைந்தவளே/

நன்னாரி வேராகவே
என்னுயிர் பற்றியவளே/
தண்ணீரும் கண்ணீரும் 
அருந்திடும் விழிகளும்/

சொந்தமென வந்திடு 
வாழ்க்கையைக் காத்திடு/
குற்றுயிரும் கொலயுயிருமாய்
தத்தளிக்கிறது ஆத்மாவுக் 
விடுதலை கொடுத்திடு/ 

ஆர் எஸ் கலா