கண்ணுக்குள் ஒரு காதல்
********************************
கண்ணுக்குள் ஒரு
காதல் உருவாக்கியவளே/
கனிந்து பழம்
பறிக்கும் முன்பாகவே/
பிரிந்து செல்வது
நியாயமோ என்னவளே/
மண்ணுக்கு இரையாகி
விண்ணுக்கு விரைந்தாலும்/
பெண்ணுக்கு கொடுமை
இளைத்திடாது என்னிதயம்/
நுண்ணங்கி போல்
உள்ளம் நுழைந்தவளே/
நன்னாரி வேராகவே
என்னுயிர் பற்றியவளே/
தண்ணீரும் கண்ணீரும்
அருந்திடும் விழிகளும்/
சொந்தமென வந்திடு
வாழ்க்கையைக் காத்திடு/
குற்றுயிரும் கொலயுயிருமாய்
தத்தளிக்கிறது ஆத்மாவுக்
விடுதலை கொடுத்திடு/
ஆர் எஸ் கலா
No comments:
Post a Comment