Sunday, 11 August 2024

சமூகக்கவிதை

இயற்கையே உனக்கு 
ஏன் இந்தச் சீற்றம் .
***********************
இயற்கையே பொறுத்து
அருள்ளால் என்ன ?
மக்களை ஏற்றுக் 
கொண்டு மகிழ்ந்தாலென்ன ?
உன்னையே நம்பி 
உன்னிலே தஞ்சமானதை /
நீயும் மறப்பதில்
நியாயமோ சொல் அன்னையே/

எத்தனை உயிர்கள் 
அத்தனை ஆத்மாவின் /
ஆசைகளையும் தேவைகளையும்
அறிந்தவள் நீ அல்லவோ/
பாவம் தீர்க்கவா 
நீராகவே பயணித்தாய் /
இப்போது  நீயே பாவியானாயே 
மனிதர்கள் இடையினிலே/

சீற்றம் குறைத்திடு 
அழிப்பை நிறுத்திடு /
வேண்டுதலை ஏற்றிடு 
உயிரினங்களைக் காத்திடு நீயே /

ஆர் எஸ் கலா

No comments:

Post a Comment