கதா பாத்திரம்
*********-******
பார்த்துப் பார்த்து 
ஓடர் பண்ணி 
போட்டு போட்டு 
மினிக்கிய  பொண்ணுக்கு .
கேட்டால் கூட 
கிடைக்க வில்லையாம் 
மேக்காப் போட்டுக்க பொருட்கள் .
கொழுத்த உடலும்
கொழுப்புக் கரைக்குயுதாம் 
கொடுத்த சலுகையும் 
மெது மெதுவாகக் குறையுதாம்.
கணத்த ஆசைகள் 
நிறைவேறாமல் கரையுதாம்.
பொறுத்து வாழ 
வேண்டிய கட்டாயம் 
துரத்தி விட்டால் 
போக்கத்த இடம் இல்லையாம். 
தினம் தினம் 
வீட்டுக்குள் கொலுவலாம் 
கலவரம் தொடருதாம்  
காற்று வாக்கில் கதைகளும் 
ஊருக்குள் பரவுதாம் .
கண்ணீரும் தண்ணீரும்
சோற்றோடு கலந்திடும் 
காலமாய் மாறுதாம்
இதில் என்ன விந்தை .
செய்த பாவம் மெது 
மெதுவாக பாய் விரிக்க 
உதறியிட முடியாமல் 
உள்ளம் துடிக்க
பழமை நினைவு 
மூளைக்குள் மீன் பிடிக்க
எக்கரையும் இல்லாப் படகாக 
வாழ்க்கை நடுக்கடலில் துடிக்க
வெந்து நொந்து  
நூலாய்ப் போய்  எந்நாளும்  
நாட்கள் கடக்க வேண்டும் .
மூச்சும் பேச்சும் 
வாழ்வை வெறுக்க வேண்டும்.
சூழ்ச்சம காரிகளுக்கு 
இவ்வரிகள் புரிந்தால் 
ஆத்திரம் வெடிக்கும் 
ஆத்திரம் என்னும் கதா பாத்திரம் 
எனக்கும் ரொம்பவே பிடிக்கும்)
  
No comments:
Post a Comment