Friday 15 July 2022

சொந்த நாட்டில் 
இருந்திடும் வேளையில் 
உந்தன் ஞாபகம் வந்து 
எந்தன்  நெஞ்சத்தில் 
ஊற்றெடுத்திடும் .

என எண்ணி 
என்னைச் சேர்ந்தவர்கள் 
எல்லோரும் முடிவு 
பண்ணி விட்டார்கள்  

என்னைத் 
தேர்த்துவதாக நினைத்து 
அயல் நாட்குக்கு 
வழி அனுப்பியும் விட்டார்கள் .

மகனே உனக்கும்
எனக்கும் 
இறைவனுக்கும் 
மட்டுமே தெரியும் 
இங்கு தான் 
உந்தன் எண்ணம் 
எந்தன் உயிரை 
வாட்டி எடுத்திடும் என்று. 

ராத்திரி பதினோரு 
மணி ஆனதுமே 
மனதில் ஓடி 
வந்து விடுகின்றாய் .

அப்போது தானே 
உனது வேலை முடிந்து 
ஓய்வு நேரம்  
எடுத்துக் கொண்டு
என்னோடு 
அதிகமாய்ப்  பேசிய காலம் .

நான் கண்ணீர் சிந்தாமல்
இமை மூடி உறங்கிய நாளே
இதுவரை இல்லையெடா 

இது யாருக்குப் புரியும் 
யாருக்குத் தெரியும்
மௌனமாய் 
அழுதவாறே நான்
அமைதியிழந்து 
உறங்கி எழுவது. 

அயல் நாட்டிலும் 
அரவணைப் போடு 
வைத்திருந்த உன்னை 
வந்தெறங்கியதும் மறந்திட 
இயலுமோ  சொல்லடா .

நான் என்ன உன் 
இரத்தத்தை உறிஞ்சி 
உயிரைக் குடிக்க 
வந்த பொண்டாட்டியா? 

என் உயிரிலும் 
உதிரத்திலும் பங்கிட்டு
கரு சுமந்த அன்னை  
அல்லவா? இயலுமா
 எங்கு சென்றாலும் 
உன்னை மறந்து 
வாழ்ந்திட. நீயும் கூறடா.
😭😭😭😭😭😭😭

No comments:

Post a Comment