சொந்த நாட்டில்
இருந்திடும் வேளையில்
உந்தன் ஞாபகம் வந்து
எந்தன் நெஞ்சத்தில்
ஊற்றெடுத்திடும் .
என எண்ணி
என்னைச் சேர்ந்தவர்கள்
எல்லோரும் முடிவு
பண்ணி விட்டார்கள்
என்னைத்
தேர்த்துவதாக நினைத்து
அயல் நாட்குக்கு
வழி அனுப்பியும் விட்டார்கள் .
மகனே உனக்கும்
எனக்கும்
இறைவனுக்கும்
மட்டுமே தெரியும்
இங்கு தான்
உந்தன் எண்ணம்
எந்தன் உயிரை
வாட்டி எடுத்திடும் என்று.
ராத்திரி பதினோரு
மணி ஆனதுமே
மனதில் ஓடி
வந்து விடுகின்றாய் .
அப்போது தானே
உனது வேலை முடிந்து
ஓய்வு நேரம்
எடுத்துக் கொண்டு
என்னோடு
அதிகமாய்ப் பேசிய காலம் .
நான் கண்ணீர் சிந்தாமல்
இமை மூடி உறங்கிய நாளே
இதுவரை இல்லையெடா
இது யாருக்குப் புரியும்
யாருக்குத் தெரியும்
மௌனமாய்
அழுதவாறே நான்
அமைதியிழந்து
உறங்கி எழுவது.
அயல் நாட்டிலும்
அரவணைப் போடு
வைத்திருந்த உன்னை
வந்தெறங்கியதும் மறந்திட
இயலுமோ சொல்லடா .
நான் என்ன உன்
இரத்தத்தை உறிஞ்சி
உயிரைக் குடிக்க
வந்த பொண்டாட்டியா?
என் உயிரிலும்
உதிரத்திலும் பங்கிட்டு
கரு சுமந்த அன்னை
அல்லவா? இயலுமா
எங்கு சென்றாலும்
உன்னை மறந்து
வாழ்ந்திட. நீயும் கூறடா.
No comments:
Post a Comment