Sunday 18 August 2019

காதல் செய் கள்வனே

நான்கு  விழி நோக்கிய வேளையிலே /
மான் விழி வழியே என் உயிர் நுழைந்தவனே /
இரவு தூக்கத்திலே கனவோடு கலந்து வருபவனே /
கசங்காத என்  சேலை கசங்கிட வேண்டுமடா சின்னவனே /
யானை சுவைக்காத செங்கரும்பு உடலடா மன்னவனே /
நுகர்ந்தவாறே மலர் மீது ஊரும் தேனி போல் /
நுகர்ந்து சுவைத்திட நீ வந்து விடு நாயகனே /
செவ்வாழை நானடா உன் கரம் கொண்டு மாலை மாத்தடா மாதவனே/
உள்ளமதை கொள்ளையிட்டு உணர்ச்சியை திறந்து விட்ட  சேவகனே /
நித்தம் நான் முத்தமழையிலே குளிக்க வேண்டுமடா/
யுத்தமின்றி காதல் செய் கள்வனே /

No comments:

Post a Comment