Monday 12 August 2019

முள்ளி #வாய்க்கால் #சுவடுகள்

முல்லி வாய்க்கால்
போர் பலருக்கு/
கொள்ளி வைக்க
வைத்து திட்டது./
உறவுகளை தொலைத்து
உணர்வுகளை பறித்து /
உள்ளத்தால் நொந்து 
இரத்த வெள்ளத்தில் /
துவைந்து துன்பத்தில்
துவண்டு வாழவைத்ததே /
நீர் ஓடிய ஓடை எங்கும் /
செங்குருதியும்
சேர்ந்து ஓட விட்டதே /
உண்ண உணவின்றி
உறங்க இடமின்றி /
பதுங்கு குழியில்
இறங்க வைத்ததே /
சொத்து இழந்து சுகம் இழந்து /
பெற்ற பிள்ளைகளையும்
சேர்த்து இழந்து /
ஈழமண் மீட்பு கனவாய் போனதே /

No comments:

Post a Comment