கனவோடு வந்து கலந்தவளே./
காதல் நரம்பின்
வழியே நுழைந்தவளே./
கலைந்து விடாத கலைமுகத்தழகானவளே./
கரைந்து வருகிறது எனது மோகமடி என்னவளே ...../
இரவெல்லாம் உறக்கத்திலே
இதழ் கடிக்கின்றாய்./
இதமான இன்பத்துக்கு
என்னை அழைக்கிறாய்./
இச்சையெல்லாம் காதோரம் சொல்லி முடிக்கிறாய்./
இமை திறந்து பார்த்தால் இருட்டறைக் காட்சியே கொடுக்கிறாய் ..../
வெட்கம் துறக்க பக்கம்
நெருங்கி வாயேன்டி./
பட்டுக் கன்னத்தில் முத்தம் பதிக்க /பத்தினியே என் அருகே வாயேன்டி./
பருவ காலப் பனியும் படர்ந்திருக்குதடி./
பட்டு மெத்தை தான் விரித்து
பர பரப்புடன் நான் காத்திருக்கின்றேனடியே ....../
இடை தொட தடை போடுவாயோ?
சடை போட்ட கூந்தலிலே
என் விரல் நடை போட விடுவாயோ.?
படையில்லா காதல் மன்னன் நானடி /
சிற்பச்சிலையே உன்னை நான் விடுவேனோடி?
இரு விழி வழியே இதயம் நுழைந்த கிளியே /
காத்திருக்கின்றேன் நான்
ஏரிக் கரை தனிலே தனியே ...../
No comments:
Post a Comment