Thursday 4 July 2019

என்னுள் நுழைந்த காதல் செந்தேனே

கனவோடு வந்து கலந்தவளே./

காதல் நரம்பின் 

வழியே நுழைந்தவளே./

கலைந்து விடாத கலைமுகத்தழகானவளே./

கரைந்து வருகிறது எனது மோகமடி என்னவளே ...../


இரவெல்லாம் உறக்கத்திலே 

இதழ் கடிக்கின்றாய்./

இதமான இன்பத்துக்கு 

என்னை அழைக்கிறாய்./

இச்சையெல்லாம்  காதோரம் சொல்லி முடிக்கிறாய்./

இமை திறந்து பார்த்தால் இருட்டறைக் காட்சியே கொடுக்கிறாய் ..../


 வெட்கம் துறக்க பக்கம் 

நெருங்கி வாயேன்டி./

பட்டுக் கன்னத்தில் முத்தம் பதிக்க /பத்தினியே என் அருகே வாயேன்டி./

பருவ காலப் பனியும் படர்ந்திருக்குதடி./

பட்டு மெத்தை தான் விரித்து 

பர பரப்புடன் நான் காத்திருக்கின்றேனடியே ....../



இடை தொட தடை போடுவாயோ?

சடை போட்ட கூந்தலிலே 

என் விரல்  நடை போட விடுவாயோ.?

படையில்லா காதல் மன்னன்  நானடி /

சிற்பச்சிலையே உன்னை நான் விடுவேனோடி? 

இரு விழி வழியே இதயம்  நுழைந்த கிளியே /

காத்திருக்கின்றேன் நான் 

ஏரிக் கரை தனிலே தனியே ...../ 

No comments:

Post a Comment