Tuesday 30 July 2019

வேசம் கலைந்ததே

உறக்கம் திறக்கும் இமைகள்/
ஏக்கம் நிறைக்கும் இதயம்/
சிரிக்க மறக்கும் இதழ்கள்/
சிதறிப் போன சிந்தனைகள் /

#குணமாய்ப்-பேசி -இனமாய்க்
#கொடுத்தாயே- நீ -எனக்கு /

கறக்கக் கறக்க நீர்
சுரக்கும் விழிகள்/
பறக்கப் பறக்க சோகம்
பிறக்கும் நெஞ்சம் /
எடுக்க எடுக்கக்
குறையாத கவலைகள்/
துடைக்கத் துடைக்க தீராத வலிகள்/

#பரிவோடு -வந்து -பரிசாகக்
#கொடுத்தாய் -நீ -எனக்கு /

தேய்க்கத் தேய்க்கத் தேயாத
உன் எண்ணம் /
வறுக்க வறுக்க கருகாத காதல்/
துரத்தத் துரத்த ஓடாத ஆசைகள்/
கசக்கக் கசக்க கசங்காத மோகங்கள்/

#மெது- மெதுவாய் - மனம் -நுழைந்து
#அள்ளிக்-கொடுத்தாய் -எதற்கு /

நான் கிள்ளுக்கீரை போல்
வாடி வதங்கி மடியவா?
பிடிவாதம் பண்ணி
நேசப் படியேறி வந்தாயோ?
பிடி கொடுக்காமலே  உமது
வேசம் கலைத்து சென்றாயோ?

No comments:

Post a Comment