Saturday 27 July 2019

கடுதாசி இன்னும் வரக் காணலேயே மச்சான்<$$


மச்சான் நினைவில் ஆசை வச்சான்
மச்சம் மேல் கண்ணை வச்சான்
மச்சினிச்சி என் மேல் உசுரை வச்சான்
மச்சினி என் பெயரை பச்சை குத்தி வச்சான்....♥

புல் அறுக்கப் போகையிலே கையைத் தொட்டுப்புட்டான்
புல்லாங் குழல் மன்னன் போல் என்னை மயங்கிப்புடடான்..♥

கள்ளி நான் நகைக்கையிலே
தள்ளி நின்று ரசிக்கையிலே
முள்ளி வாய்க்கால் வரை நான் பார்க்கையிலே
பள்ளி கொண்டான் நெஞ்சினிலே.....♥

பார்த்துப்  பார்த்து துணியை அடுக்கி வச்சேன்
பாவி நினைவையும் சேர்த்து வச்சேன்
பாதி வழி வந்து பட்டணம் அனுப்பி வச்சேன்
பாவி மனசை மட்டும் பூட்டி வச்சேன்....♥

ஆசை வந்து என்னை ஆட்டுது புள்ள
ஆனால் நான் கைநாட்டுப் புள்ள...♥

நாளு எழுத்து எழுதிக் கொடுத்துப்புட்டு போடியம்மா
நாளு நாளாய் தூக்கம் இல்லையடியம்மா....♥

கடுகு டப்பாவில் அம்மா சேர்த்த சில்லறையில்
நடுக்கத்தோடு எடுத்தேன் என் கையில்
கடுதாசி போடபணம் தேவையெனில்
கடு கடுப்பார் அம்மா பெரும் பாடாய்ப் போகும் சமளிக்கையில்....♥

முத்திரை வாங்கி ஒட்டிப்புட்டேன்
முத்தையாக் கிட்ட கொடுத்துப்புட்டேன்...♥

மச்சாங்கிட்ட இருந்து மறு பதிலைக் காணோமே
மச்சாங்கிட்ட இருந்து கடுதாசியைக் காணோமே....♥

காத்திருக்கேன் நான் வழி பார்த்திருக்கேன்
காத்தாடி போல் நான்கு பக்கத்துத் தெருவையும் பார்த்திருக்கேன்...♥

காணவில்லைடி பொன்னம்மா
காணவில்லையிடி அன்னம்மா
காணவில்லையே கடுதாசியை
ஆத்தா மங்கம்மா
ஏங்கவச்சமச்சானே ஏனோ
தாமதம் கடுதாசிபோட பட்டணம்
கொடுக்கும் நடுக்கமா பதை
தெரியாத தயக்கமா
கடுதாசியை இன்னும் வரக் காணலையே
மச்சானே என்னை  ஏங்க வச்சானே...♥

    

No comments:

Post a Comment