Wednesday 3 July 2019

தில்லு முல்லு மனிதன்

உறவாக வருவோர் எல்லாம் 
உண்மையாக இருப்பதில்லை
உரிமையென்று வருவோர் எல்லாம் உதவியாக இருப்பதில்லை ....///

உள்ளதை உள்ளபடி உரைப்பதில்லை 
உறவாடிக் கெடுப்போரும்  குறைவதில்லை
குறை கூற நிறையவே உண்டு
சொன்னாலும் ஏற்றுக் கொள்ளும்
பக்குவம் இல்லை......///

நெருங்கிப் பழகியே நிறைப்பான்
அவன் சட்டப் பைகளை 
நல்லவனாகவே நடிப்பான் பிறர்  மத்தியிலே 
திருட்டுக் கூட்டங்கள் கை கோர்த்த பின்னே
திருத்தி எடுக்க முடியாது....///

அடித்துச் சொல்லி முறைத்துச்  சொல்லி
திருட்டை மறைக்க எத்தனையோ
கதைகள் சொல்லி முடிப்பான்
ஏமாற்றியே வாழ்க்கையைக் கடப்பான்
தில்லு முள்ளு  வேலை செய்யும் வழியையே
தேடிப் பிடிப்பான்....///

              

No comments:

Post a Comment