Friday, 20 September 2024

உனக்கென மட்டும்
வாழும் இதயமடா(டி).
::::::::::::::::::::::::::::::::::::::::::
உயிரென நினைத்தேன்
உள்ளத்தைக் கொடுத்தேன்/
உறவெனக் கண்டேன்
உதிரத்தில் இணைத்தேன்/
உறங்கிட இதயத்தையே
உறைவிடமாய் அளித்தேன்/
உணர்வுக்குள் விதைத்தேன் 
உணர்ச்சியால் ரசித்தேன் /

உனக்கும் எனக்குமான 
உதயமென மகிழ்ந்தேன்/
உல்லாசமாய் மலர்ந்தேன் 
உதிரிப்பூவாய் இருந்தேன் /
உசுப்பேத்தியே கைப்பிடித்தாய்
உதறியே கதறடிக்காய்/
உச்சத்தில் துயரேற்றினாய் 
உச்சரிப்பில் வலியேற்றினாய் /

உண்மையைக்  கூறினால்
உணர்ந்திடுவாயோ என்னில்  /
உனக்கென மட்டும் வாழும் இதயமடா(டி)/
உற்சாகமும் சோர்வும் 
உன்னால் ஆனவையெடா/
உற்றுழியாய்க் கொல்லுவதை
உற்றுத்தான் பாருடா (டி)./

ஆர் எஸ் கலா

Thursday, 12 September 2024

மையலிலே தவிக்கிறேன்
*****************************
மையலிலே தவிக்கிறேன்
மையிட்டவளைத் தேடுகிறேன்/
பூங்குயிலே கேளாயோ
பூமகளே வாராயோ/

தேனருவியாய் விழுந்திடு/
தேன்மொழியில்  பேசிவிடு/
காதோரம் கூறிடுவாயோ
காதலோடு கவிதைகளும்/

பார்த்து ஓயவில்லை 
பாத்திடும் பணியும் தீரவில்லை/
சேகரித்தேன் கற்பனையை
சேதாரமாகிது அத்தனையும் /

நாளும் பொழுதும்
நானும் ஓடானேன்/
யாசகம் தேடிடவே 
யாழினியே தயாரானேன்/

வேதனையில் நூலானேன்
துக்கத்தில் சருகானேன்/
பக்கத்தில் நீயிருந்தால்
கைகளுக்கு  மலராவேன் /

மைனாவே வந்திடுவாயோ 
இல்லை மறுத்திடுவாயோ?
மாமனோட முகங்காண 
மைவிழியே தயக்கமேனோ/

ஆர் எஸ் கலா

Sunday, 1 September 2024

உன்னை நீ விரும்பு
************************
உணர்வோடு
உன்னை நீ விரும்பு /
உள்ளத்தில் 
உயர்வாய் நினைவுதனை நிறுத்து/
உந்துதல் எப்போதும் 
உமக்காகவே  கொடுத்திடு/
உனது செயலை
உனக்குள்ளே பாராட்டு/
உன்னிடமே இருக்கின்றது 
உனக்கான உற்சாகங்கள்/
உதாசீனம் பண்ணாதே 
உள்ளுணர்வை எந்நாளும் /

ஆர் எஸ் கலா
வெண்ணிலவே விலகாதே
******************************
என்னவள்  திரை 
நீக்கிடும் வேளையிது/
மறைவாகவே நான் 
நோக்கிடும் நேரமிது/
கருங்கூட்டம் கூடாமல்
மனனெருடல் போக்கிடு/
வதனமதைக் காட்டியே
உள்ளத்தை தேர்த்தியிடு/
உருக்கமாய் எழுதுகிறேன்
வெண்ணிலவே விலகாதே/

ஆர் எஸ் கலா
வாழ்வும் வளமாகும் 
பெற்றோரை வணங்கிடவே.
************************--******

சிலையின் முன் நின்று 
தலைக்கு மேல் இருகரம் ஏற்றி 
ஏதேதோ புலம்புகிறாய்/

வடக்குத் திசைப் பார்த்துப்
பன்னீர் தெளிக்கிறாய்/
கிழக்கை நோக்கிப் 
பூக்கள் குவிக்கிறாய் /
வீடெங்கும் வண்ணங்களான 
சாமி படங்களை மாட்டுகிறாய் /

உயிருள்ள ஓவியமாய் 
மூச்சு விடும் காவியமாய் /
உனக்காகவே உயிர் 
கொடுத்திடும் தெய்வமாய் /

கண்ணாகவே உனைப்
கார்த்திடும் கடவுளாய் /
கூடவே இருந்திடும் 
பெற்றோரை மறந்திடுகிறாய் /
வாழ்வும் வளமாகும் 
பெற்றோரை வணங்கிடவே /

ஆர் எஸ் கலா