மையலிலே தவிக்கிறேன்
*****************************
மையலிலே தவிக்கிறேன்
மையிட்டவளைத் தேடுகிறேன்/
பூங்குயிலே கேளாயோ
பூமகளே வாராயோ/
தேனருவியாய் விழுந்திடு/
தேன்மொழியில் பேசிவிடு/
காதோரம் கூறிடுவாயோ
காதலோடு கவிதைகளும்/
பார்த்து ஓயவில்லை
பாத்திடும் பணியும் தீரவில்லை/
சேகரித்தேன் கற்பனையை
சேதாரமாகிது அத்தனையும் /
நாளும் பொழுதும்
நானும் ஓடானேன்/
யாசகம் தேடிடவே
யாழினியே தயாரானேன்/
வேதனையில் நூலானேன்
துக்கத்தில் சருகானேன்/
பக்கத்தில் நீயிருந்தால்
கைகளுக்கு மலராவேன் /
மைனாவே வந்திடுவாயோ
இல்லை மறுத்திடுவாயோ?
மாமனோட முகங்காண
மைவிழியே தயக்கமேனோ/
No comments:
Post a Comment